thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபுகழ்Pukazh
குறள் 231

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu

Oodhiyam Illai Uyirkku

They gather fame who freely give The greatest gain for all that live

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை

Couplet

See that thy life the praise of generous gifts obtain;Save this for living man exists no real gain

Explanation

Give to the poor and live with praise There is no greater profit to man than that