thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalஈகைEekai
குறள் 229

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.

Iraththalin Innaadhu Mandra Nirappiya

Thaame Thamiyar Unal

Worse than begging is that boarding Alone what one's greed is hoarding

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

SP (சாலமன் பாப்பையா)

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

MK (மு.கருணாநிதி)

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது

Couplet

They keep their garners full, for self alone the board they spread;-'Tis greater pain, be sure, than begging daily bread

Explanation

Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more