thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalதீவினையச்சம்Theevinaiyachcham
குறள் 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala

Thannai Atalventaa Thaan

From wounding others let him refrain Who would from harm himself remain

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

MK (மு.கருணாநிதி)

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்

Couplet

What ranks as evil spare to do, if thou would'st shunAffliction sore through ill to thee by others done

Explanation

Let him not do evil to others who desires not that sorrows should pursue him