thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalதீவினையச்சம்Theevinaiyachcham
குறள் 205

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து.

Ilan Endru Theeyavai Seyyarka

Seyyin Ilanaakum Matrum Peyarththu

Who makes poverty plea for ill Shall reduce himself poorer still

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

SP (சாலமன் பாப்பையா)

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

MK (மு.கருணாநிதி)

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்

Couplet

Make not thy poverty a plea for ill;Thy evil deeds will make thee poorer still

Explanation

Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still