thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபயனில சொல்லாமைPayanila Sollaamai
குறள் 195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

Seermai Sirappotu Neengum Payanila

Neermai Yutaiyaar Solin

Glory and grace will go away When savants silly nonsense say

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

SP (சாலமன் பாப்பையா)

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

MK (மு.கருணாநிதி)

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்

Couplet

Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense

Explanation

If the good speak vain words their eminence and excellence will leave them