thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalவெஃகாமைVeqkaamai
குறள் 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

Patupayan Veqkip Pazhippatuva Seyyaar

Natuvanmai Naanu Pavar

Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

MK (மு.கருணாநிதி)

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்

Couplet

Through lust of gain, no deeds that retribution bring,Do they, who shrink with shame from every unjust thing

Explanation

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained