thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalவெஃகாமைVeqkaamai
குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

Natuvindri Nanporul Veqkin Kutipondrik

Kutramum Aange Tharum

Who covets others' honest wealth That greed ruins his house forthwith

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

MK (மு.கருணாநிதி)

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்

Couplet

With soul unjust to covet others' well-earned store,Brings ruin to the home, to evil opes the door

Explanation

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred