thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

Poruththal Irappinai Endrum Adhanai

Maraththal Adhaninum Nandru

Forgive insults is a good habit Better it is to forget it

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

SP (சாலமன் பாப்பையா)

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

MK (மு.கருணாநிதி)

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

Couplet

Forgiving trespasses is good always;Forgetting them hath even higher praise;

Explanation

Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that