thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalபொறையுடைமைPoraiyutaimai
குறள் 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Akazhvaaraith Thaangum Nilampolath Thammai

Ikazhvaarp Poruththal Thalai

As earth bears up with diggers too To bear revilers is prime virtue

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

SP (சாலமன் பாப்பையா)

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

MK (மு.கருணாநிதி)

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

Couplet

As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best

Explanation

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues