thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்KarpiyalபுலவிPulavi
குறள் 1301

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.

Pullaa Thiraaap Pulaththai Avar

Urum Allalnoi Kaankam Siridhu

Feign sulk; embrace him not so that We can see his distress a bit

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

SP (சாலமன் பாப்பையா)

நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

MK (மு.கருணாநிதி)

ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக

Couplet

Be still reserved, decline his profferred love;A little while his sore distress we 'll prove

Explanation

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not