thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு புலத்தல்Nenjotupulaththal
குறள் 1300

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya

Nenjam Thamaral Vazhi

Why wonder if strangers disown When one's own heart is not his own?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

SP (சாலமன் பாப்பையா)

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

MK (மு.கருணாநிதி)

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்

Couplet

A trifle is unfriendliness by aliens shown,When our own heart itself is not our own

Explanation

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger