உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju
O heart, you see how he slights me Yet you clasp him as if friendly
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
SP (சாலமன் பாப்பையா)
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!
MK (மு.கருணாநிதி)
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே
Couplet
'Tis plain, my heart, that he 's estranged from thee;Why go to him as though he were not enemy
Explanation
O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."