thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு புலத்தல்Nenjotupulaththal
குறள் 1291

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.

Avarnenju Avarkkaadhal Kantum Evannenje

Neeemakku Aakaa Thadhu

You see, his heart is his alone; Why not my heart be all my own?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

SP (சாலமன் பாப்பையா)

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

MK (மு.கருணாநிதி)

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

Couplet

You see his heart is his aloneO heart, why not be all my own

Explanation

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?