thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅடக்கம் உடைமைAtakkamutaimai
குறள் 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.

Ondraanun Theechchol Porutpayan Untaayin

Nandraakaa Thaaki Vitum

Even a single evil word Will turn all good results to bad

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

SP (சாலமன் பாப்பையா)

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

MK (மு.கருணாநிதி)

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

Couplet

Though some small gain of good it seem to bring,The evil word is parent still of evil thing

Explanation

If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil