thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅடக்கம் உடைமைAtakkamutaimai
குறள் 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal

Sokaappar Sollizhukkup Pattu

Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

MK (மு.கருணாநிதி)

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

Couplet

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep

Explanation

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue