thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநிறையழிதல்Niraiyazhidhal
குறள் 1255

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று.

Setraarpin Sellaap Perundhakaimai Kaamanoi

Utraar Arivadhondru Andru

Dignity seeks not a deserter But Love-sick is its innovator

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

SP (சாலமன் பாப்பையா)

தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

MK (மு.கருணாநிதி)

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை

Couplet

The dignity that seeks not him who acts as foe,Is the one thing that loving heart can never know

Explanation

The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love