thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநிறையழிதல்Niraiyazhidhal
குறள் 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும்.

Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam

Maraiyirandhu Mandru Patum

I was proud of my sex-reserve Lo lust betrays what I preserve

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

SP (சாலமன் பாப்பையா)

இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

MK (மு.கருணாநிதி)

மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே

Couplet

In womanly reserve I deemed myself beyond assail;But love will come abroad, and casts away the veil

Explanation

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public