thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalகனவுநிலை உரைத்தல்Kanavunilaiyuraiththal
குறள் 1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.

Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku

Uyalunmai Saatruven Man

I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

SP (சாலமன் பாப்பையா)

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

MK (மு.கருணாநிதி)

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்

Couplet

If my dark, carp-like eye will close in sleep, as I implore,The tale of my long-suffering life I'll tell my loved one o'er

Explanation

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord