உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu
He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
SP (சாலமன் பாப்பையா)
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?
MK (மு.கருணாநிதி)
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
Couplet
I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray
Explanation
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful