thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபசப்புறு பருவரல்Pasapparuparuvaral
குறள் 1184

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal

Kallam Piravo Pasappu

He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

SP (சாலமன் பாப்பையா)

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

MK (மு.கருணாநிதி)

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

Couplet

I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray

Explanation

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful