சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa
Noyum Pasalaiyum Thandhu
He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
SP (சாலமன் பாப்பையா)
அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
MK (மு.கருணாநிதி)
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்
Couplet
Of comeliness and shame he me bereft,While pain and sickly hue, in recompense, he left
Explanation
He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness