thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபசப்புறு பருவரல்Pasapparuparuvaral
குறள் 1183

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.

Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa

Noyum Pasalaiyum Thandhu

He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

SP (சாலமன் பாப்பையா)

அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.

MK (மு.கருணாநிதி)

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்

Couplet

Of comeliness and shame he me bereft,While pain and sickly hue, in recompense, he left

Explanation

He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness