thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபடர்மெலிந் திரங்கல்Patarmelindhirangal
குறள் 1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை.

Mannuyir Ellaam Thuyitri Aliththiraa

Ennalladhu Illai Thunai

Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

SP (சாலமன் பாப்பையா)

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!

MK (மு.கருணாநிதி)

`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'

Couplet

All living souls in slumber soft she steeps;But me alone kind night for her companing keeps

Explanation

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion