காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
Kaamak Katumpunal Neendhik Karaikaanen
Yaamaththum Yaane Ulen
Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
SP (சாலமன் பாப்பையா)
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.
MK (மு.கருணாநிதி)
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்
Couplet
I swim the cruel tide of love, and can no shore descry,In watches of the night, too, 'mid the waters, only I
Explanation
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live