thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalபிரிவு ஆற்றாமைPirivaatraamai
குறள் 1154

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு.

Aliththanjal Endravar Neeppin Theliththasol

Theriyaarkku Unto Thavaru

He parts whose love told me -fear not Is my trust in him at default?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

SP (சாலமன் பாப்பையா)

என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?

MK (மு.கருணாநிதி)

பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?

Couplet

If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurredBy those who trusted to his reassuring word

Explanation

If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?