அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
Aridharo Thetram Arivutaiyaar Kannum
Pirivo Ritaththunmai Yaan
On whom shall I lay my trust hence While parting lurks in knowing ones?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.
SP (சாலமன் பாப்பையா)
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.
MK (மு.கருணாநிதி)
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது
Couplet
To trust henceforth is hard, if ever he depart,E'en he, who knows his promise and my breaking heart
Explanation
As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible