கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani
Loss and gain by cause arise; Equal mind adorns the wise
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
SP (சாலமன் பாப்பையா)
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
MK (மு.கருணாநிதி)
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
Couplet
The gain and loss in life are not mere accident;Just mind inflexible is sages' ornament
Explanation
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)