thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalநடுவு நிலைமைNatuvu Nilaimai
குறள் 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

Thakkaar Thakavilar Enpadhu Avaravar

Echchaththaar Kaanap Patum

The worthy and the unworthy Are seen in their posterity

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

SP (சாலமன் பாப்பையா)

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

MK (மு.கருணாநிதி)

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

Couplet

Who just or unjust lived shall soon appear:By each one's offspring shall the truth be clear

Explanation

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings