thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநாணுத் துறவுரைத்தல்Naanuththuravuraiththal
குறள் 1133

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.

Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen

Kaamutraar Erum Matal

Once I was modest and manly My love has now Madal only

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

SP (சாலமன் பாப்பையா)

நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

MK (மு.கருணாநிதி)

நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்

Couplet

I once retained reserve and seemly manliness;To-day I nought possess but lovers' 'horse of palm'

Explanation

Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful