thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநாணுத் துறவுரைத்தல்Naanuththuravuraiththal
குறள் 1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.

Nonaa Utampum Uyirum Matalerum

Naaninai Neekki Niruththu

Pining body and mind lose shame And take to riding of the palm

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

SP (சாலமன் பாப்பையா)

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

MK (மு.கருணாநிதி)

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்

Couplet

My body and my soul, that can no more endure,Will lay reserve aside, and mount the 'horse of palm'

Explanation

Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse