thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநலம் புனைந்து உரைத்தல்Nalampunaindhuraiththal
குறள் 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

Anichchamum Annaththin Thooviyum Maadhar

Atikku Nerunjip Pazham

The soft flower and the swan's down are Like nettles to the feet of the fair

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

SP (சாலமன் பாப்பையா)

உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

MK (மு.கருணாநிதி)

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை

Couplet

The flower of the sensitive plant, and the down on the swan's white breast,As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed

Explanation

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji