thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalநலம் புனைந்து உரைத்தல்Nalampunaindhuraiththal
குறள் 1119

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

Malaranna Kannaal Mukamoththi Yaayin

Palarkaanath Thondral Madhi

Like the face of my flower-eyed one If you look, then shine alone O moon!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

SP (சாலமன் பாப்பையா)

நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

MK (மு.கருணாநிதி)

நிலவே! முலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்

Couplet

If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,Shine for my eyes alone, O moon, shine not for all to see

Explanation

O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all