thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalதகை அணங்குறுத்தல்Thakaiyananguruththal
குறள் 1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.

Kootramo Kanno Pinaiyo Matavaral

Nokkamim Moondrum Utaiththu

Is it death, eye or doe? All three In winsome woman's look I see

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

SP (சாலமன் பாப்பையா)

என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

MK (மு.கருணாநிதி)

உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே

Couplet

The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?Or fawn's shy glance? All three appear In form of maiden here

Explanation

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?