thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalதகை அணங்குறுத்தல்Thakaiyananguruththal
குறள் 1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.

Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip

Pedhaikku Amarththana Kan

This artless dame has darting eyes That drink the life of men who gaze

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

SP (சாலமன் பாப்பையா)

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

MK (மு.கருணாநிதி)

பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?

Couplet

In sweet simplicity, A woman's gracious form hath she;But yet those eyes, that drink my life, Are with the form at strife

Explanation

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity