thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalஇரவச்சம்Iravachcham
குறள் 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu

Ketuka Ulakiyatri Yaan

Let World-Maker loiter and rot If \"beg and live\" be human fate

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

SP (சாலமன் பாப்பையா)

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

MK (மு.கருணாநிதி)

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்

Couplet

If he that shaped the world desires that men should begging go,Through life's long course, let him a wanderer be and perish so

Explanation

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish