இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu
Ketuka Ulakiyatri Yaan
Let World-Maker loiter and rot If \"beg and live\" be human fate
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
SP (சாலமன் பாப்பையா)
பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.
MK (மு.கருணாநிதி)
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்
Couplet
If he that shaped the world desires that men should begging go,Through life's long course, let him a wanderer be and perish so
Explanation
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish