thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalஇரவச்சம்Iravachcham
குறள் 1061

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.

Karavaadhu Uvandheeyum Kannannaar Kannum

Iravaamai Koti Urum

Not to beg is billions worth E'en from eye-like friends who give with mirth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

MK (மு.கருணாநிதி)

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்

Couplet

Ten million-fold 'tis greater gain, asking no alms to live,Even from those, like eyes in worth, who nought concealing gladly give

Explanation

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good