ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
Eevaarkan Ennuntaam Thotram Irandhukol
Mevaar Ilaaak Katai
Where stands the glory of givers Without obligation seekers?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
SP (சாலமன் பாப்பையா)
தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?
MK (மு.கருணாநிதி)
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்
Couplet
What glory will there be to men of generous soul,When none are found to love the askers' role
Explanation
What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them)