thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalஇரவுIravu
குறள் 1058

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.

Irappaarai Illaayin Eernganmaa Gnaalam

Marappaavai Sendruvan Thatru

This grand cool world shall move to and fro Sans Askers like a puppet show

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

MK (மு.கருணாநிதி)

வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை

Couplet

If askers cease, the mighty earth, where cooling fountains flow,Will be a stage where wooden puppets come and go

Explanation

If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet