கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
Karappilaa Nenjin Katanarivaar Munnindru
Irappumo Reer Utaiththu
Request has charm form open hearts Who know the duty on their part
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.
MK (மு.கருணாநிதி)
உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்
Couplet
The men who nought deny, but know what's due, before their faceTo stand as suppliants affords especial grace
Explanation
There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)