இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin
Even demand becomes a joy When the things comes without annoy
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.
MK (மு.கருணாநிதி)
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்
Couplet
Even to ask an alms may pleasure give,If what you ask without annoyance you receive
Explanation
Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)