பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalநல்குரவுNalkuravu
குறள் 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum
The pest of wanton poverty Brings a train of misery
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
SP (சாலமன் பாப்பையா)
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
MK (மு.கருணாநிதி)
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
Couplet
From poverty, that grievous woe,Attendant sorrows plenteous grow
Explanation
The misery of poverty brings in its train many (more) miseries