thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalநல்குரவுNalkuravu
குறள் 1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.

Irpirandhaar Kanneyum Inmai Ilivandha

Sorpirakkum Sorvu Tharum

Want makes even good familymen Utter words that are low and mean

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

SP (சாலமன் பாப்பையா)

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

MK (மு.கருணாநிதி)

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்

Couplet

From penury will spring, 'mid even those of noble race,Oblivion that gives birth to words that bring disgrace

Explanation

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words