thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalஉழவுUzhavu
குறள் 1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam

Thozhudhuntu Pinsel Pavar

They live who live to plough and eat The rest behind them bow and eat

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

SP (சாலமன் பாப்பையா)

பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

MK (மு.கருணாநிதி)

உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது

Couplet

Who ploughing eat their food, they truly live:The rest to others bend subservient, eating what they give

Explanation

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life