உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu
Ezhuvaarai Ellaam Poruththu
Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
SP (சாலமன் பாப்பையா)
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.
MK (மு.கருணாநிதி)
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்
Couplet
The ploughers are the linch-pin of the world; they bearThem up who other works perform, too weak its toils to share
Explanation
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil