பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel
Manpukku Maaivadhu Man
The world rests with the mannered best Or it crumbles and falls to dust
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
SP (சாலமன் பாப்பையா)
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.
MK (மு.கருணாநிதி)
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்
Couplet
The world abides; for 'worthy' men its weight sustainWere it not so, 'twould fall to dust again
Explanation
The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish