இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?
Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
SP (சாலமன் பாப்பையா)
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
MK (மு.கருணாநிதி)
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
Couplet
Who sees the pleasure kindly speech affords,Why makes he use of harsh, repellant words
Explanation
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?