thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalசான்றாண்மைSaandraanmai
குறள் 988

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மை உண் டாகப் பெறின்.

Inmai Oruvarku Ilivandru Saalpennum

Thinmai Un Taakap Perin

No shame there is in poverty To one strong in good quality

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

SP (சாலமன் பாப்பையா)

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

MK (மு.கருணாநிதி)

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

Couplet

To soul with perfect virtue's strength endued,Brings no disgrace the lack of every earthly good

Explanation

Poverty is no disgrace to one who abounds in good qualities