thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalசான்றாண்மைSaandraanmai
குறள் 984

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.

Kollaa Nalaththadhu Nonmai Pirardheemai

Sollaa Nalaththadhu Saalpu

Not to kill is penance pure Not to slander virtue sure

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

SP (சாலமன் பாப்பையா)

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

MK (மு.கருணாநிதி)

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு

Couplet

The type of 'penitence' is virtuous good that nothing slays;To speak no ill of other men is perfect virtue's praise

Explanation

Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults