thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalபெருமைPerumai
குறள் 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.

Siriyaar Unarchchiyul Illai Periyaaraip

Penikkol Vemennum Nokku

The petty-natured ones have not The mind to seek and befriend the great

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.

MK (மு.கருணாநிதி)

பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை

Couplet

'As votaries of the truly great we will ourselves enroll,'Is thought that enters not the mind of men of little soul

Explanation

It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature