thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்Kudiyiyalமானம்Maanam
குறள் 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.

Mayirneeppin Vaazhaak Kavarimaa Annaar

Uyirneeppar Maanam Varin

Honour lost, the noble expire Like a yak that loses its hair

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

SP (சாலமன் பாப்பையா)

மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்

Couplet

Like the wild ox that, of its tuft bereft, will pine away,Are those who, of their honour shorn, will quit the light of day

Explanation

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs