thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalகுடியியல்KudiyiyalகுடிமைKutimai
குறள் 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum

Kulaththil Pirandhaarvaaich Chol

Soil's nature is seen in sprout The worth of birth from words flow out

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

SP (சாலமன் பாப்பையா)

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

MK (மு.கருணாநிதி)

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம் அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்

Couplet

Of soil the plants that spring thereout will show the worth:The words they speak declare the men of noble birth

Explanation

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth)