thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalநட்பியல்Natpiyalமருந்துMarundhu
குறள் 947

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.

Theeyala Vandrith Theriyaan Peridhunnin

Noyala Vindrip Patum

who glut beyond the hunger's fire Suffer from untold diseases here

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

MK (மு.கருணாநிதி)

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்

Couplet

Who largely feeds, nor measure of the fire within maintains,That thoughtless man shall feel unmeasured pains

Explanation

He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)